Saturday 30 March 2013

புதுக்கவிதை

இயைபும் மோனையும் இழுத்தடிக்க
எதுகையும் முரணும் முகஞ்சுழிக்க
பாவகை நாலும் பறந்தோட
கருத்தும் எங்கோ கட்டவிழ
கிடைத்த சொல்லில் கிறுக்கிவைக்க
புதுக்கவிதை என்றும், அதனை
ஹைக்கூ என்றும், அய்யோ
போற்றுது மக்கள் மனமே!!!!

Wednesday 27 March 2013

விக்கல்....

விக்கல் வரும் போதெல்லாம் 
உன் நினைவு...

என் தலையைத் தட்டி
நீ தண்ணீர் குடித்த நினைவு...

அதிர்ச்சி வைத்தியம் என்று
அசட்டுத்தனம் நீ செய்த நினைவு...

"நினைக்க நான் இருக்க
நினைத்தது யார் உன்னை??"
என்று நித்தமும் நீ சண்டையிட்ட நினைவு...

இன்று...
நினைத்தது நீ இல்லை... தெரிந்தும்
நினைத்திருக்க மாட்டோயோ... என
ஏங்குகிறேன்.. 
விக்கல் வரும் போதெல்லாம்...

(நினைத்து நினைத்து எழுதியது
சுபாசினி. :P)

Wednesday 6 March 2013

சுஜாதாவின் "கடவுள் இருக்கிறாரா?"


சுஜாதாவின் "கடவுள் இருக்கிறாரா?" நூலைப் படித்தேன். uncertainity principle, quantum theory, E=mc2 அனைத்தும் படித்தது தான். இருந்தும் அவர் காட்டியது புதிய கோணம். எதற்கு என்று தெரியாமல் சேர்த்த பள்ளிக் கல்வித் துறை, மதிப்பெண்ணிற்கு விரட்டிய பள்ளி, அறிவியல் கோட்படிகளின் பின்னனி தெரியாமல் நடத்திய ஆசிரியர்கள்... இப்படியே படித்து பழகிய விதிகளை அவர் விளக்கிய விதம் அருமை. ஒரு வாசகன் என்பதைத் தாண்டி ஒரு பொறியியல் மாணாக்கரின் மனதில் இடம்பிடிக்கும் நூல். கடவுள் இருக்கிறாரா??? It depends....